Monday, December 6, 2010

கவிதையும் நானே. ஓவியமும் நானே.







கால நகர்வில்

சிதைந்து போன

ஒற்றையடிப் பாதை.

நீண்ட தொடராய்.


பக்கமெல்லாம் முட்புதரும்

பாம்புப் புற்றும்.

ஆங்காங்கே

சிதறிக்கிடக்கும் பிணங்கள்.


நாயின் ஊளை

செவிகளை தாக்கி

திகிலை ஊட்டி -என்

நகர்வைத் தடுமாற வைக்கும்.


அக்கம் பக்கம் பார்த்து

திரும்பிப் பார்க்கிறேன்.

நான் மட்டும் தனிய.

birthday